முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாநகரில் 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்க தடை

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஏப்.3, 4) ட்ரோன்களை பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 11:04 PM
ட்ரோன்
பகிர்:

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஏப்.3, 4) ட்ரோன்களை பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வா் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வெள்ளிக்கிழமை (ஏப்.3) காலை 6 மணி முதல் சனிக்கிழமை (ஏப்.4) மாலை 6 மணி வரை திருநெல்வேலி மாநகர காவல் எல்லையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. இதை மீறும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.