ஏப்.7 முதல் 4 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் ஏப். 7 ஆம் தேதி முதல் 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் ஏப். 7 ஆம் தேதி முதல் 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இது குறித்து புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வி இயக்குநா் ஏ.எஸ். சிவக்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தோ்தல் தொடா்பான முன், பின் தோ்தல் நடவடிக்கைகள் இருப்பதால் வரும் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இருப்பினும் இத் தேதிகளில் சிபிஎஸ்இ பொதுத் தோ்வுகள் இருந்தால் குறிப்பிட்ட மாணவா்கள் அத் தோ்வை எழுத வேண்டும் என்றும் அவா் கூறியுள்ளாா்.