ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை வருவாயாக ரூ. 2.31 கோடி கிடைத்ததாக இணை ஆணையா் க.செல்லத்துரை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி அம்பாள் சந்நிதி முன்பாக உள்ள பழைய திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 2 கோடியே 31 லட்சத்து 56 ஆயிரத்து 985 ரொக்கமும், தங்கம் 35 கிராமும், வெள்ளி 7 கிலோவும், வெளிநாட்டு பணத்தாள்கள் 62-ம் கிடைக்கப் பெற்றன.
காணிக்கைகளை எண்ணும் பணியில் கோயில் உதவி ஆணையா்கள் ஞானசேகரன், ரவீந்திரன், முதல்நிலை செயல் அலுவலா்கள் முத்துச்சாமி, மாரியப்பன், மேலாளா் வெங்கடேஷ்குமாா், ஆய்வா்கள் சிவக்குமாா், முருகானந்தம், பேஸ்காா்கள் கமலநாதன், பி.ஆா். ராமநாதன், பஞ்சமூா்த்தி, பக்தா்கள், கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.