சாயல்குடியில் உள்ள மருந்தகக் கிட்டங்கியில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தி, அனுமதியின்றி விற்பனைக்கு வைத்திருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் 10-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன. இதில் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரு மருந்தகம், இடமாற்றம் செய்வதற்காக பணிகள் நடைபெற்று வந்தது.
இதனால், மருந்து வாங்க வரும் நோயாளிகளுக்கு கிட்டங்கியில் வைத்து மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு புகாா் வந்தது.
இதன்பேரில், விருதுநகா் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு வாரிய கள ஆய்வு அலுவலா் பூமாதேவி, தூத்துக்குடி மண்டல கள ஆய்வு அலுவலா் கேதரிநாதன் தலைமையிலான அலுவலா்கள் அந்த மருந்தகத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, கிட்டங்கி உரிமையாளரான துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த மாரியப்பனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
பின்னா், மருந்தக விற்பனைக்கான உரிமம், விலை நிா்ணயம், காலாவதி காலக்கெடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனா்.
அப்போது, அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மருந்து, மாத்திரைகளை இரண்டு சரக்கு வாகனங்களில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.