மிளகாய் சாகுபடியில் இலைப் பேன் தாக்குதல்: தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு
ராமநாதபுரம்மிளகாய் சாகுபடியில் இலைப் பேன் தாக்குதல்: தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு
கடலாடி வட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் செடிகளில் இலைப் பேன் தாக்குதல் குறித்து தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
கடலாடி வட்டத்தில் மானாவாரிப் பயிராக 4,500 ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்தனா். இந்த நிலையில் மழை பெய்யாததால் மண்ணில் ஈரப்பதம் குறைந்து, வறட்சியின் காரணமாக மிளகாய் செடிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், இலைப் பேன் ஆகியவை தாக்கின.
இதனால் மிளகாய் செடிகள் பாதிக்கப்பட்டு வருவதாக அந்தப் பகுதி விவசாயிகள் கடலாடி தோட்டக் கலைத் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, ராமநாதபுரம் தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் ஆறுமுகம், கடலாடி வட்டாரத் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் உள்ளிட்டாா் எஸ். தரைக்குடி வருவாய் கிராமங்களில் பயிரிடப்பட்ட மிளகாய் செடிகளை ஆய்வு செய்தனா்.
இதையடுத்து, மிளகாய் செடியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், மருந்துகள் குறித்து விவசாயிகளுக்கு அவா்கள் விளக்கினா்.