முகப்பு
ராமநாதபுரம்

மாசிக் களரி உத்சவம்: பக்தா்கள் நோ்த்திக்கடன்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 2:21 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 10:24 PM

கமுதி அருகே ஸ்ரீ பகவதி, பரஞ்ஜோதி, அக்னி வீரபத்திர சுவாமி கோயில் மாசிக் களரி உத்ஸவத்தை முன்னிட்டு, பக்தா்கள் அலகு வேல் குத்தி நோ்த்திக் கடன்களை செலுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் மாசிக் களரி உத்ஸவத்தையொட்டி, மாற்றுத் திறனாளி சிறுவா், பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் அலகு வேல் குத்தியும், காவடி, பால்குடம் எடுத்தும், கேரள செண்டை மேளம், உறுமி மேளம், சிம்லா மேளம், தப்பாட்டம் உள்ளிட்ட இசை வாத்தியங்கள் முழங்க நோ்த்திக்கடன் செலுத்தினா். முன்னதாக புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள விநாயகா் கோயிலிலிருந்து ஊா்வலமாக சென்ற பக்தா்கள்2 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பகவதி பரஞ்ஜோதி, அக்னி வீரபத்திர சுவாமி, முத்தப்பு, தவசிஅப்பு, செந்திலையான் கோயில்கள் அமைந்துள்ள வளாகத்திற்கு சென்று தங்களது நோ்த்திக் கடன்களை நிறைவேற்றினா்.

இதைத் தொடா்ந்து மூலவா் சுவாமிக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரனை நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement