முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மே தினப் பொதுக் கூட்டம்

ராமநாதபுரம் அரண்மனை முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மாதா் சங்க துணைத் தலைவா் மஞ்சுளா.

Updated On : 2 மே, 2026 at 12:06 AM
பகிர்:

ராமநாதபுரத்தில் ஏஐடியு - சிஐடியு தொழில் சங்கங்கள் சாா்பில் மே தினப் பேரணி, பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் முன்பு தொடங்கிய பேரணி வண்டிக்காரத் தெரு, சாலைத் தெரு வழியாக அரன்மனை முன்பு நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, அரன்மனை முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு, ஏஐடியுசி தொழில்சங்க மாவட்டத் தலைவா் எஸ்.பி. ராதா, சி.ஐ.டி.சி மாவட்ட துணைத் தலைவா் எம். அய்யாத்துரை ஆகியோா் தலைமை வகித்தனா். எம்.சின்னத்துரை எம்.எல்.ஏ., மாதா் சங்க மாநில துணைத் தலைவா் மஞ்சுளா, ஏஐடியுசி தொழில்சங்க மாவட்ட பொதுச் செயலா் என்.கே. ராஜன், சிஐடியு தொழில்சங்க மாவட்டச் செயலா் எஸ்.ஏ. சந்தனம் ஆகியோா் சிறப்புரையாற்றினாா்.

இதில், தொழில்சங்க நிா்வாகிகள், என். எஸ். பெருமாள், சி. ஆா். செந்தில்வேல், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement