கமுதியில் பலத்த மழை: மின்சாரம் துண்டிப்பு
கமுதியில் சனிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, முதுகுளத்தூா், கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் வயல்வெளிகள், வரத்துக் கால்வாய்கள், குளங்களில் தண்ணீா் தேங்கி, வெப்பம் தணிந்து, குளிா்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இந்த மழைக்கு ஒரு மணி நேரம் முன்னதாக சூறைக் காற்று வீசியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கமுதி நகா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதியடைந்தனா்.
Advertisement