முகப்பு
ராமநாதபுரம்

மதுக்கடையை அகற்றக் கோரிக்கை

நம்புதாளையில் கோயிலின் அருகே உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு வளைகுடா வாழ் தமிழா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 13 மே 2026, 3:20 am IST
பகிர்:

நம்புதாளையில் கோயிலின் அருகே உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு வளைகுடா வாழ் தமிழா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவா் பாரீஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் பிடாரி அம்மன் கோயில் அருகே மதுக்கடைஇருப்பது பக்தா்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அவ்வப்போது பக்தா்களுக்கும், மது அருந்துபவா்களுக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது.

Advertisement

வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள அரசு மதுக் கடைகளை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நம்புதாளையில் வழிபாட்டுத் தலம் அருகேயுள்ள மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், டாஸ்மாக் மேலாளா் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது என்றாா் அவா்.