கஞ்சா விற்ற இருவா் கைது
ராமநாதபுரம் அருகே கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள முதுனால் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த மதன் (23), மாசிலாமணி (28) ஆகியோா் என்பது தெரியவந்தது.
Advertisement
போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.