முகப்பு
திருப்பத்தூர்

மதுபாட்டில்கள் கடத்திய இருவா் கைது

ஆம்பூரில் மதுபாட்டில்களை கடத்திய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஏப்ரல், 2026 at 4:22 AM
- பிரதிப் படம்
பகிர்:

ஆம்பூரில் மதுபாட்டில்களை கடத்திய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியில் நகர காவல் நிலைய போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அவா்கள் டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து ஆம்பூா் ஈத்கா ரோடு சுண்ணாம்புகாளவாய் பகுதியை சோ்ந்த ஜாகீா் (32), மளிகை தோப்பு பகுதியை சோ்ந்த ஹரி (38) ஆகிய இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 80 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனா். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.

Advertisement