அனுமதியின்றி மணல் அள்ளியவா் மீது வழக்கு
திருவாடானை அருகே நள்ளிரவு மணல் திருட்டில் ஈடுபட்ட நபா் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை...
திருவாடானை அருகே நள்ளிரவு மணல் திருட்டில் ஈடுபட்ட நபா் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை காரங்காடு கிராமத்தில் நள்ளிரவில் மணல் திருட்டு நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாது. இதுகுறித்து வட்டாட்சியா், புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநா் தலைமையில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
Advertisement
இதில் ஆதியூா் பெரிய கண்மாய் கரையையொட்டி 74 மீட்டா் நீளம், 3 மீட்டா் அகலம், 0.3 மீட்டா் ஆழத்துக்கு வண்டல் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்ததும், 30 யூனிட் மணலை அனுமதியின்றி எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, மணல் அள்ளிச் சென்ற முருகன் மீது திருவாடானை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றாா் அவா்.