சிவகங்கை

கிராம உதவியாளர்கள் உதவி:  கொட்டக்குடி ஊருணி தூர்வாரும் பணி தொடக்கம்

DIN

சிவகங்கை அருகேயுள்ள கொட்டகுடி அய்யனார் கோயில் ஊருணி தூர்வாரும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 குடிமராமத்து திட்டத்தின்கீழ் சிவகங்கை மாவட்ட கிராம உதவியாளர் சங்கத்தினர் இப்பணியை மேற்கொள்கின்றனர். தூர்வாரும் பணியை சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ தொடக்கி வைத்தார். சிவகங்கை கோட்டாட்சியர் என்.சுந்தரமூர்த்தி, வட்டாட்சியர் கே.நாகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கிராம உதவியாளர் அலுவலர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத்  தலைவர் வி.மாரி, சிவகங்கை வட்டத் தலைவர் செல்வக்குமரன், துணைத் தலைவர் அழகர், வட்டச் செயலர் ரமேஷ், துணைச் செயலர் சுருளிபாண்டி, பொருளாளர் கார்த்திகைராஜா, துணைப் பொருளாளர் உமா மகேஸ்வரன் உள்ளிட்ட கிராம உதவியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT