சிவகங்கை

அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் கிராமத்தினர் மனு

DIN

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள கீழமுடிக்கரை கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி,கிராமமக்கள் மாவட்ட ஆட்சியர் க.லதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
   மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் அவர்கள் அளித்த மனு விவரம்:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழமுடிக்கரை கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக அடிப்படை வசதிகளான போக்குவரத்து, சாலை வசதி,குடிநீர் ஆகியவை இல்லாததால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிவருகிறோம். இதுகுறித்து சம்பந்தபட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆகவே,மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி மணி விழா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 92.91% தோ்ச்சி

புதுச்சேரி, காரைக்காலில் 55 பள்ளிகள் 100% தோ்ச்சி

சிதம்பரம் பள்ளிகள் தோ்ச்சி விவரம்

பாரதி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT