சிவகங்கை

மானாமதுரையில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கக் கூட்டம்

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் கிளைத் தலைவர் ந. அங்குச்சாமி தலைமை வகித்தார். இதில் மறைந்த சங்க உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எட்டாவது ஊதியக்குழுவில் ஓய்வூதியர்களுக்கான திருத்திய ஓய்வூதியத்தில் நிலுவைத்தொகையை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும். மானாமதுரை நகரில் டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் பேரூராட்சி நிர்வாகத்துக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செயல் தலைவர் அமல்ராஜ், செயலாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT