முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூரில் விபத்து: முதியவர் சாவு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த  சாலை விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த  சாலை விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
   திருப்பத்தூர் அருகேயுள்ள  கருவேல்குறிச்சியைச் சேர்ந்தவர் நீதிபதி(65). இவர் செவ்வாய்க்கிழமை  இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை சாலையில் சென்றுகொண்டிருந்துபோது, நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த நீதிபதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தார்.
இவ்விபத்துக் குறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →