டி.புதூர் மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த 500 காளைகள்
சிவகங்கை மாவட்டம் டி.புதூரில் உள்ள தர்ம முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் டி.புதூரில் உள்ள தர்ம முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு டி.புதூரில் உள்ள தர்ம முனீஸ்வரர்,சோணை,அய்யனார் உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, கோயில் அருகே வாடி வாசலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மஞ்சுவிரட்டில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர்,புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 500க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் விரட்டிச் சென்று பிடித்தனர். இதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.