சிவகங்கை

வாஜ்பாய் மறைவு: மானாமதுரையில் அனைத்துக் கட்சியினர் மெளன அஞ்சலி ஊர்வலம்

DIN

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் மறைவையொட்டி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அனைத்துக் கட்சி சார்பில் சனிக்கிழமை மெளன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. 
மானாமதுரை பழைய பேருந்து நிலையம் முன்பு ஊர்வலம் தொடங்கியது.
இதில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்கமணி (இந்திய கம்யூ.), குணசேகரன் (அதிமுக), பாஜக சிவகங்கை மாவட்டச் செயலர் கண்ணன், மானாமதுரை நகரச் செயலர் சங்கரசுப்பிரமணியன், தமாகா மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகேசன்,அதிமுக நகரச் செயலர் விஜிபோஸ், திமுக ஒன்றியச் செயலர்கள் அண்ணாதுரை, ராஜாமணி, தேமுதிக ஒன்றியச் செயலர் தர்மர்ராமு, மதிமுக ஒன்றியச் செயலர் அசோக், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கணேசன், பிரமேந்திரன் உள்பட அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
ஊர்வலம் மானாமதுரை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பேரூராட்சி அலுவலகம் முன் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த  வாஜ்பாய் உருவப் படத்திற்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT