சிவகங்கை

காரைக்குடியில் பிப்.27-இல் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

DIN

காரைக்குடியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலைய அலுவலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப். 27) மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
   இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிர்மானத்தின் மேற்பார்வை பொறியாளர் மு.சின்னையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்குடி கோட்டத்திற்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. காரைக்குடியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில்,காரைக்குடிகோட்டத்துக்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு மின் வாரியம் தொடர்பான புகார்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரனை செய்யப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT