சிவகங்கை

விவேகானந்தர் பிறந்த நாள் விழா

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் விவேகானந்தரின் பிறந்தநாள் தேசிய இளைஞர் தின விழாவாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் விவேகானந்தரின் திருவுருவ படத்திற்கு இளைஞர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பூமாயி அம்மன் கோயில் அருகிலும், மற்றும் தென்மாபட்டு, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து முன்ணனி நகரத் தலைவர் ஜி.மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மா.செந்தில்பாண்டி முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் சி.மணிகண்டன் வரவேற்றார். விவேகானந்தர் திருவுருவ படத்திற்கு முன் இளைஞர்கள் இளைஞர் எழுச்சி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டன. பா.ஜ.க. இளைஞரணி பரணி, பொருளாதார பிரிவுச் செயலாளர் மோகன், மற்றும் இந்து முன்ணனி பாலா, கிஷோர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT