சிவகங்கை

சிவகங்கை அரசு கல்லூரி நாளை திறப்பு

DIN

சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி பிப்.2 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
 அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர்ந்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரிக்கு கடந்த ஜன.23 முதல் காலவரையறை இன்றி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் பிப்.2 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அனைத்து வகுப்புகளும் நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT