சிவகங்கை

மானாமதுரை அருகே மர்மக் காய்ச்சலால் பெண் சாவு

DIN


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் குண்டுமலை, இவரது மனைவி பார்வதி(34). இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதையடுத்து இடைக்காட்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பார்வதிக்கு காய்ச்சல் பாதிப்பு குறையவில்லை. இதைத் தொடர்ந்து உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் இவர் முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கிருந்து பார்வதி மேல் சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இவரை பரிசோதித்த டாக்டர்கள் பார்வதி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மானாமதுரை பகுதியில் ஏராளமானோர் மர்மக் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது இங்கு பெண் ஒருவர் இறந்திருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT