சிவகங்கை

தேவகோட்டை பள்ளியின் பவள விழா

DIN

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ராம் நகரில் உள்ள  தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியின்  பவள விழாவையொட்டி வெள்ளிக்கிழமை ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
இப்பள்ளியின் 75 ஆவது ஆண்டு பவள விழா அக்டோபர் 12,13,14 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான வெள்ளிக்கிழமை சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. 
இதில்  இயேசு சபை மதுரை மாநிலத் தலைவர் முனைவர் டெனிஸ் பொன்னையா, இயேசு சபை பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் லூர்து  
பிரகாசம், தேவகோட்டை வட்டார அதிபர் ஜோசப் கென்னடி, தாளாளர் லூர்துசாமி, தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும்  கலந்துகொண்டனர். 
திருப்பலிக்கு பின் நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ் ஆசிரியர் அன்பரசன் வரவேற்றார். ஆயர் சூசை மாணிக்கம் ஆசியுரை வழங்கினார்.  ஆசிரியர் ஆரோக்கிய ஈசாக் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT