சிவகங்கை

கவிமணி குழந்தைகள் சங்கக் கூட்டம்

DIN

காரைக்குடியில் கவிமணி குழந்தைகள் சங்கத்தின் 174-ஆவது மாதக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கவிஞர் பால.நடராஜன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சிறப்புகள் குறித்து குழந்தைகள் பேசினர். கூட்டத்தில் 2017 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆ.பீட்டர் ராஜா, வித்யாகிரி மெட்ரிக். பள்ளி தமிழாசிரியர் மெ. செயங்கொண்டான் ஆகியோருக்கும், அழகப்பா அரசுக் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் மெ. மெய்யப்பனுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மூவரும் ஏற்புரை வழங்கினர்.
முன்னதாக சங்க அமைப்பாளர் தேவி நாச்சியப்பன் வரவேற்றுப் பேசினார். துணை அமைப்பாளர் நாச்சியப்பன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!

நிக்கி ஹேலி இஸ்ரேல் பயணம்!

குற்றால அருவிகளில் குளிக்க 7 ஆவது நாளாக தடை நீடிப்பு

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

SCROLL FOR NEXT