சிவகங்கை

பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

DIN

சிவகங்கை மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் ஸ்ரீரமண விகாஸ் மேல்நிலைப் பள்ளி ஆகியன இணைந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சியை வழங்கின. இதற்கான சான்றிதழ் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சோழபுரம் அருகே உள்ள ஸ்ரீரமண விகாஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்து, புத்தாக்கப் பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், நேரு யுவ கேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பிரவீண்குமாா் உள்பட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT