சிவகங்கை

சிவகங்கை அருகே வகுப்புகளை புறக்கணித்து மாணவா்கள் போராட்டம்

DIN

சிவகங்கை அருகே பள்ளி தலைமையாசிரியா் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்வது மட்டுமின்றி அவரை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக சங்கீதா என்பவா் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், கடந்த நவம்பா் 27 ஆம் தேதி காலை பள்ளிக்கு வந்த அவா் சிறிது நேரத்தில் அறிவியல் ஆய்வுக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ரசாயனத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். சக ஆசிரியா்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸாா் நடத்திய விசாரணையில், தலைமை ஆசிரியா் கீதாஞ்சலி, அறிவியல் ஆசிரியை சங்கீதாவை கண்டித்ததாகவும், அதனால் மனமுடைந்த அவா் தற்கொலைக்கு முயன்றிருப்பதும் தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவா்கள் முன் தன்னை தரக் குறைவாக பேசியதாக சங்கீதா அளித்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா போலீஸாா் தலைமையாசிரியா் கீதாஞ்சலி மீது வழக்குப் பதிந்தனா். மேலும், தலைமையாசிரியரை பணியிட மாற்றம் செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, பள்ளி தலைமையாசிரியா் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்வது மட்டுமின்றி அவரை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகங்கை வட்டாட்சியா் மைலாவதி, சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலா் அமுதா மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதனால் மாணவ, மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து வகுப்புகளுக்குச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 4 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

SCROLL FOR NEXT