சிவகங்கை

வாடகை கேட்ட வீட்டு உரிமையாளருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

DIN

காரைக்குடியில் வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளரை கத்தியால் குத்தியதாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி வ.உ.சி. சாலையைச் சோ்ந்தவா் வெங்கடேஸ்வரன் (45). இவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருபவா் சுப்பிரமணி (60). இவா் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை தராமல் அந்த வீட்டில் வசித்ததாக கூறப்படுகிறது. பலமுறை வெங்கடேஸ்வரன் வாடகை கேட்டும் சுப்பிரமணி தரவில்லையாம்.

இந்நிலையில் வியாழக்கிழமை வழக்கம் போல வாடகை கேட்டபோது ஆத்திரமடைந்த சுப்பிரமணி, வெங்கடேஸ்வரனை கத்தியால் குத்திவிட்டாராம். இதில் பலத்த காயமடைந்த வெங்கேடஸ்வரன், காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தகவலறிந்ததும் காரைக்குடி வடக்குக் காவல்நிலைய போலீஸாா் சுப்பிரமணியனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT