சிவகங்கை

தேவகோட்டை பள்ளியில் ராமகிருஷ்ண ஜயந்தி விழா

DIN

தேவகோட்டை ராமகிருஷ்ண வித்யாலயம் நடுநிலைப் பள்ளியில், ராமகிருஷ்ணரின் 184 ஆவது ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
      ஸரிமத் சுவாமி ஆத்மானந்தா மஹராஜ் தலைமையில் நடைபெற்ற  இந்த விழாவில், காலையில்  மங்கள இசை, வேத பாராயணம், விஷ்ணு சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, திருமுறை பாராயணம், பஜனை மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இரவில், பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேவகோட்டை  வட்டாரக் கல்வி அலுவலர் லெட்சுமி தேவி சிறப்புறையாற்றினார், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் வாழ்த்துரை வழங்கினார். இதில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர் ஆர்.எம். கிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், தேவகோட்டை ஜமீன்தார் ஏ.எல்.ஏ.ஆர். நாராயணன் செட்டியார் முன்னிலை வகித்தார். முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியர் இலக்கியமேகம்  சீனிவாசன் வரவேற்றார். பள்ளித் தாளாளர் கிருஷ்ணவேணி கலந்துகொண்டார். ஆசிரியை ஹேமலதா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT