சிவகங்கை

அ.காளாப்பூரில் மாடு முட்டி மாணவர் சாவு

DIN

திருப்பத்தூர் அருகே புதன்கிழமை தொழுவிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட மாடு முட்டி மாணவர் உயிரிழந்தார்.
 சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில்  மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதனையொட்டி கிராமம் சார்பில் தொழுவிலிருந்து மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது அதே ஊரில் உள்ள ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் மாடு அவிழ்த்து விடப்பட்டபோது வனேந்திரன் மகன்  பாண்டி பாலா (14)  மீது மாடு முட்டியதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர்.  பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பாலா உயிரிழந்தார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவம் தொடர்பாக எஸ்.வி.மங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT