சிவகங்கை

அரசனூர் பகுதியில் ஜனவரி 18 மின்தடை

DIN

சிவகங்கை மாவட்டம் அரசனூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (ஜன.18) நடைபெற உள்ளதால் அந்த பகுதியில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பூவந்தி மின்பகிர்மானத்தின் உதவி மின் பொறியாளர் கு.செந்தில்குமார் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
அரசனூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், அரசனூர், இலுப்பகுடி, பெத்தானேந்தல், திருமாஞ்சோலை, பில்லூர், படமாத்தூர், சித்தலூர், கண்ணாரிருப்பு, கானூர், பச்சேரி, மைக்கேல்பட்டினம், களத்தூர், ஏனாதி, கல்லூரணி, கோவானூர் ஆகிய பகுதிகளிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT