சிவகங்கை

மானாமதுரையில் வழிப்பறி முயற்சி 2 பேருக்கு கத்திக்குத்து

DIN

மானாமதுரையில் புதன்கிழமை இரவு நடந்த வழிப்பறி சம்பவத்தில் இருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். 
மானாமதுரை உடைகுளம் பகுதியில் வசிப்பவர் மண்பாண்டத் தொழிலாளி முனியசாமி. இவர் அண்ணாசிலை அருகே வைகையாற்றை ஒட்டியுள்ள செங்கல் காளவாசல் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த அடையாளம் தெரியாத 4 பேர் கத்தியைக் காட்டி முனியசாமியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இச் சம்பவத்தைப் பார்த்த தீத்தான்பேட்டையைச் சேர்ந்த செல்வம் , வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கண்டித்துள்ளார். இதில் 4 பேரும் சேர்ந்து முனியசாமி, செல்வம் ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். 
காயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச் சம்பவம் குறித்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிந்து தப்பிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT