சிவகங்கை

இளையான்குடியில் ஜன.24-இல் தொழில்திறன் பயிலரங்கம்

DIN


சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஜாகிர் உசேன் கலைக் கல்லூரியில் வரும் 24 ஆம் தேதி (வியாழக்கிழமை) தொழில்திறன் பயிலரங்கம் நடைபெற உள்ளது. 
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலர் ரா.மணிகணேஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் தொழில்திறனை மேம்படுத்தும் வகையில் தொழில் திறன் பயிலரங்கம் இளையான்குடியில் உள்ள ஜாகிர் உசேன் கலைக் கல்லூரி வளாகத்தில் வரும் 24 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெறும் இந்த பயிலரங்கத்தில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பயிற்சி வழங்க உள்ளனர். ஆகவே சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதில் பங்கேற்று பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT