சிவகங்கை

முன் விரோதத்தில் முதியவருக்கு கத்திக் குத்து

DIN

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பள்ளிதம்மத்தைச் சேர்ந்த லூர்து உடையார் மகன் அமுல்ராஜ் (76). இவர், புலியடிதம்மத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். 
இவரது கடை அருகே அதே ஊரைச் சேர்ந்த ஜேசுராசு மகன் லூயிஸ் (40) என்பவரும் கடை வைத்துள்ளார். இந்நிலையில், இருவரது குடும்பத்தினருக்குமிடையே இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. 
இதனால், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது செவ்வாய்க்கிழமை, அமுல்ராஜ், லூயிஸ் ஆகிய இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில், லூயிஸ் தான் மறைத்து வைத்திருத்த கத்தியால் அமுல்ராஜை குத்தியுளார்.இதில் பலத்த காயமடைந்த அமுல்ராஜ், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 
இதுகுறித்த புகாரின்பேரில், காளையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து, லூயிஸை செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT