சிவகங்கை

காளையார்கோவில் அருகே கார் கவிழ்ந்து இருவர் சாவு

DIN

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே செவ்வாய்க்கிழமை கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
பரமக்குடி காசிம் பவனக்காரத் தெருவைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (54). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை திருச்சி விமான நிலையத்துக்கு வந்துள்ளார். 
இவரை அழைத்து வருவதற்காக மனைவி சபிதா பேகம் (45), மகள்கள் நஜீம் பாத்திமா(19) , அஜீபா பாத்திமா(17), உறவினரான ராஜாமுகமது (63) ஆகியோர் காரில் சென்றுள்ளனர். காரை எம்.பெத்தானேந்தலைச் சேர்ந்த சோனைச்செல்வம்  ஓட்டி வந்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து இஸ்மாயிலை அழைத்து வந்தபோது காளையார்கோவில் அருகே புல்லுக்கோட்டை பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. 
இதில்,பலத்த காயமடைந்த ராஜா முகமது, இஸ்மாயிலின் மூத்த மகள் நஜீம் பாத்திமா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரின் சடலங்களையும் காளையார் கோவில் போலீஸார் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் வந்த இஸ்மாயில் உள்ளிட்ட நால்வரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT