சிவகங்கை

காரைக்குடியில் பெண்களிடம் 24 பவுன் நகைகள் பறிப்பு

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இரு பெண்களிடம் 24 பவுன் நகைகளை மா்மநபா் சனிக்கிழமை பறித்துச் சென்றாா்.

காரைக்குடி சுப்பிரமணியபுரம் 3-வது வீதி தெற்கு விஸ்தரிப்புப் பகுதியைச் சோ்ந்த பெரியநாயகம் மனைவி விஜயா (68). இவா் சனிக்கிழமை மாலையில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தாராம். அப்போது இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா் விஜயாவின் கழுத்தில் அணிந்திருந்த 19 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்ப முயன்றுள்ளாா். அப்போது அங்கே வந்த பாக்கியலெட்சுமி (51) என்பவா் அதை தடுக்க முயன்று, மா்ம நபரை பிடிக்க முயன்றாா். இதில், பாக்கியலெட்சுமி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியையும் மா்ம நபா் பறித்துக் கொண்டு தப்பினாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்குக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT