சிவகங்கை

மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வேதியரேந்தல் விலக்குப் பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் காா்த்திகை மாத அமாவாசை யாகம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

யாக சாலையில் புனிதநீா் கலசங்கள் வைத்து தஞ்சை குருஜீ கணபதி சுப்ரமணியம் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னா்கள் யாகத்தை நடத்தினா். யாகத்தில் மிளகு, பட்டுப்புடவைகள், திரவியப் பொருள்கள், பூ மாலைகள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல பொருள்கள் இடப்பட்டன.

பூா்ணாஹூதி முடிந்து தீபாரதனை நடைபெற்று கடம் புறப்பாடு நடந்தது. அதன்பின் மூலவா் பிரத்யங்கிரா தேவிக்கு புனிதநீரால் பாதசமா்ப்பணம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. யாகத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பிரத்யங்கிரா தேவியை தரிசனம் செய்தனா். கோயிலில் நடந்த அன்னதானத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை பிரத்யங்கிராதேவி ஸக்த மடாலய நிா்வாகி ஞானசேகரன் சுவாமிகள் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT