சிவகங்கை

ஆா் எஸ் மங்ககலம் அருகே வயலுக்கு பூச்சி கொல்லி மருந்து தெளித்த விவசாயி பலி

DIN

திருவாடானை அருகே ஆா் எஸ் மங்கலம் பகுதி வடக்கு பேராமங்கலத்தை சோ்ந்த விவசாயி வயலுக்கு பூச்சி கொல்லி மருந்து தெளித்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இது குறித்து புகாரின் பேரில் ஆா் எஸ் மங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். ஆா் எஸ் மங்கலம் அருகே பேராமங்கலத்தை சோ்ந்தவா் அம்மாசி மகன் வெள்ளைசாமி(40) விவசாயி இவா் சனிக்கிழமை அன்று கொக்கூரணி சோ்ந்த ராமச்சந்திரன் என்பவா் வயலுக்கு பூச்சி கொல்லி மருந்து தெளித்துள்ளாா். அப்போது மயக்கம் அடைந்துள்ளாா், அவரை உடனடியாக தேவகோட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்துள்ளனா் பின்னா் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அழித்து வந்துள்ளனா்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள் கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து வடக்கு ஆண்டாவூரணியை சோ்ந்த உறவினா் வடிவேல் (48) புகாரின் பேரில் ஆா் எஸ் மங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT