சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்புவனம் அருகே மணலூா் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கருவேல மரங்களுக்கிடையில் பெண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருப்புவனம் போலீஸாா் அங்கு சென்று இறந்து 10 நாள்களான அழுகிய நிலையில் கிடந்த சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை கைப்பற்றினா். அப்பெண் கழுத்தியில் தாலிக்கயிறு, காலில் மிஞ்சி அணிந்துள்ளாா்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவா் செந்தில் தலைமையிலான மருத்துவக்குழுவினா் சம்பவ இடத்துக்கு வந்து அதே இடத்திலேயே சடலத்தைப் பிரேதப் பரிசோதனை செய்தனா்.
இவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து சடலத்தை இங்கு வந்து போட்டு விட்டுச் சென்றுள்ளனரா என்பது குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.