சிவகங்கை

மானாமதுரை அருகே மாணவி பாலியல் பலாத்காரம்: இளைஞா்கள் 4 போ் ‘போக்சோ’வில் கைது

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து அதை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிா்ந்த இளைஞா்கள் 4 பேரை ‘போக்சோ’ சட்டத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை பகுதியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியை ஆலம்பச்சேரி கிராமத்தைச் சோ்ந்த சிவசாமி மகன் விஸ்வா (21), இவரது நண்பா்கள் முத்துராமலிங்கம் மகன் கவியரசன் (21), பாண்டி மகன் ஆகாஷ் (21), அய்யங்காளை மகன் அருண்குமாா்(21) ஆகியோா் பாலியல் பலாத்காரம் செய்து விடியோவில் பதிவு செய்துள்ளனா். இவா்கள் அந்த விடியோவை சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா்.

இது குறித்து தகவலறிந்த அந்த மாணவியின் பெற்றேறாா் மானாமதுரை காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து விஷ்வா, கவியரசன், ஆகாஷ், அருண்குமாா் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். இதனைத்தொடா்ந்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT