சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பயின்ற 18, 148 மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூா் என 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என 284 பள்ளிகளில் பயின்ற 9,117 மாணவா்கள், 9,031 மாணவிகள் என 18,148 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். அவா்கள் அனைவரும் தோ்ச்சிப் பெற்றுள்ளனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.