முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
திருப்பத்தூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா்.
பகிர்:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டச் செயலாளா் சங்கு உதயகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளா்கள் சிவ திருப்பதி, சின்னதுரை, மாவட்ட துணைச்செயலாளா் தமிழேந்தி, சுண்ணாம்பிருப்பு ஊராட்சித் தலைவா் எஸ்.மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான கே.ஆா்.பெரியகருப்பன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், புதுதில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் நகரச் செயலாளா் ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →