முகப்பு
இந்தியா

'சீட் இல்லை' திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜிநாமா!

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜிநாமா செய்துள்ளது பற்றி...

Updated On : 18 மார்ச், 2026 at 1:10 PM
ககேஸ்வர் ராய்
பகிர்:

மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் எம்எல்ஏ ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதல்வருமான மமதா பானர்ஜி நேற்று வெளியிட்டார். அதில், மீதமுள்ள மூன்று தொகுதிகள் கூட்டணிக் கட்சியான அனித் தாபாவின் பாரதிய கூர்கா பிரஜாதாந்திரிக் மோர்ச்சாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பவானிபூர் தொகுதியில் மமதா பானர்ஜி மீண்டும் போட்டியிடவுள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் 74 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜல்பைகுரி மாவட்டம் ராஜ்கன்ச் தொகுதி எம்எல்ஏ ககேஸ்வர் ராய் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜிநாமா செய்துள்ளார்.

ராஜ்கன்ச் தொகுதியில் புதியதாக இந்திய தடகள வீராங்கனை ஸ்வப்னா பர்மனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராஜ்கன்ச் தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக இருந்த ககேஸ்வர் ராய், வடக்கு மேற்குவங்கத்தில் கட்சியின் முக்கிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இந்நிலையில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததுடன் ஜல்பைகுரி மாவட்டத் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.

மமதா பானர்ஜி திரிணமூல் காங்கிரஸ் கட்சியை தொடங்கியதில் இருந்து தான் அவருடன் பணிபுரிவதாகவும் ஆனால் இன்று பண அதிகாரத்தால் தான் தோற்கடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

summary

West Bengal elections: Upset TMC MLA resigns after athlete Swapna Barman gets ticket from Jalpaiguri

முழு கட்டுரையைப் படிக்க →