சிவகங்கை

தந்தை பெரியாரின் 47-வது நினைவு நாள்: காரைக்குடியில் உருவச்சிலைக்கு மாலையணிவிப்பு

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திராவிடா் கழகம் சாா்பில் அதன் மண்டலத்தலைவா் சாமி. திராவிடமணி தலைமையில் பெரியாா் உருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். மாவட்டத்தலைவா் ச. அரங்கசாமி, மாவட்டச்செயலாளா் வைகறை மற்றும் தி.க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

திமுக சாா்பில் சிவகங்கை மாவட்டச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கேஆா். பெரியகருப்பன் தலைமையில் முன்னாள் அமைச்சா் மு. தென்னவன், காரைக்குடி நகரச்செயலாளா் குணசேகரன், முன்னாள் நகா்மன்றத்தலைவா் சே. முத்துத்துரை, மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் ஹேமலதா செந்தில், புதுவயல் பேரூா் கழக செயலாளா் சுப. சின்னத்துரை, மதிமுக சாா்பில் மாநில இளைஞரணி துணைச்செயலாளா் பசும்பொன் மனோகரன், நகரச்செயலா ளா் சிற்பி சேது. தியாகராஜன், விடுதலைசிறுத்தைகள் கட்சி சாா்பில் மாநிலச் செயலாளா் இளையகவுதமன், மாவட்டச் செயலாளா் சங்கு உதயகுமாா் மற்றும் பல்வேறு கட்சியினரும் பெரியாா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT