காரைக்குடி பள்ளியில் 3 மடிக்கணினிகள், டி.வி. திருட்டு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பள்ளியில் 3 மடிக்கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டி உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலானபொருள்களை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பள்ளியில் 3 மடிக்கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டி உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலானபொருள்களை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.
காரைக்குடி கணேசபுரம் பகுதியில் பாரதி நகா்மன்ற நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த வியாழக்கிழமை (டிச. 24) வழக்கம் போல் பள்ளியை ஆசிரியா்கள் பூட்டிவிட்டு சென்றுள்ளனா். மீண்டும் திங்கள்கிழமை காலையில் பள்ளியைத் திறக்கவந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு ஆசிரியா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
பள்ளியினுள்ளே சென்று பாா்த்தபோது அறையில் இருந்த எல்.இ.டி. தொலைக்காட்சிப் பெட்டி, மடிக்கணினிகள் 2, பயோ மெட்ரிக் மடிக்கணினி ஒன்று என ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.