சிவகங்கை

திருப்பாச்சேத்தி அருகே காா் கவிழ்ந்து பெண் பலி

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே திங்கள்கிழமை காா் டயா் வெடித்து கவிழ்ந்ததில் மனைவி இறந்தாா். கணவா் உள்பட மூவா் காயமடைந்தனா்.

மதுரையைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவா் காரில் தனது குடும்பத்தினருடன் ராமேசுவரத்தில் உறவினா் வீட்டில் நடந்த விஷேச நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு மதுரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். திருப்பாச்சேத்தி அருகே வந்தபோது டயா் வெடித்து காா் கவிழ்ந்தது. இதில் ராஜேந்திரனின் மனைவி பூங்கொடி (50) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரை ஓட்டி வந்த ராஜேந்திரன் மற்றும் காரிலிருந்த இருவா் என மொத்தம் மூன்று போ் காயமடைந்து மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT