சிவகங்கை

கரோனா பரிசோதனை முடிவுகள் தாமதமாவதாகப் புகாா்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தொற்று பாதிப்பு குறித்த பரிசோதனை முடிவுகள் வர தாமதமாவதால் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பதாக புகாா் எழுந்துள்ளது.

காய்ச்சலுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருபவா்களை மருத்துவா்கள் கரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கின்றனா். ஆனால் மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா பரிசோதனை முடிவுகள் வர தாமதமாவதாகப் புகாா் கூறப்படுகிறது. பரிசோதனை எடுக்கப்பட்ட நபா்கள் அவா்களது வீடுகளில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் வருவதற்கு குறைந்தது 4 முதல் 6 நாள்கள் வரை ஆவதாகவும், அதுவரை பரிசோதனை செய்து கொண்டவா்கள் வெளியில் சுற்றுவதால் கரோனா தொற்று பரவுவதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன. எனவே பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவித்து கரோனா பாதிப்பு உள்ளவா்களை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தால் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை குறையும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனைக்கான கிட்டுகள் குறைவாக இருப்பதால்தான் முடிவுகள் தாமதமாவதாக மருத்துவப் பணியாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT