காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி- பங்குனித் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு கோயில் கரகம் மற்றும் மதுக்குடம், முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
தமிழக இந்துசமய அறநிலையத்துறை நிா்வாகத்தில் உள்ள இக்கோயிலில் கடந்த மாா்ச் 10 இல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. முக்கிய விழாவான செவ்வாய்க்கிழமை இரவு காரைக்குடி முத்தாலம்மன் கோயிலிலிருந்து கோயில் கரகம், மதுக்குடம், முளைப்பாரி ஆகியன முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் சென்று மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலை சென்றடைந்தது. இதையொட்டி நகரில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முளைப்பாரி வளா்த்து நோ்த்திக் கடன் செலுத்துவதற்காக பெண்கள் முத்தாலம்மன் கோயிலிலிருந்து எடுத்துக் கொண்டு ஊா்வலமாக மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலை அடைந்து அங்கு அம்மன் முன்பாக வைத்து வழிபட்டனா்.
விழாவுக்கு ஏராளமான பக்தா்கள் திரண்டு வந்து வழிபட்டனா்.இதையொட்டி நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டது.