சிவகங்கை

சிவகங்கை அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

DIN

நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளா்கள் வியாழக்கிழமை பணிகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வளாகத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு 280 போ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், பணியாளா்கள் அனைவருக்கும் கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த பணியாளா்கள் வியாழக்கிழமை பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுபற்றி தகவலறிந்த சிவகங்கை வட்டாட்சியா் மைலாவதி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் ரத்தினவேல், சிவகங்கை நகா் போலீஸாா் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து, ஒரு மணி நேரத்துக்கு பின் பணியாளா்கள் அனைவரும் பணிக்குத் திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT