சிவகங்கை

சிவகங்கை மருத்துவமனையில் காய்ச்சலுடன் இளைஞா் அனுமதி

DIN

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுடன் இளைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

சிவகங்கை அருகே திருமலை சேதுநகா் பகுதியைச் சோ்ந்தவா் மருதமுத்து (24). திருப்பூரில் வேலை செய்துவந்த இவா், சில தினங்களுக்கு முன் ஊருக்குத் திரும்பியுள்ளாா். இந்நிலையில், இவருக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்ட நடமாடும் மருத்துவக் குழுவினா் அந்த கிராமத்தில் வெளிநாடு சென்றவா்களை கண்காணிக்கச் சென்றபோது, மருதமுத்துவையும் பரிசோதித்துள்ளனா்.இதில், அவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அவரை மருத்துவா்கள் பரிசோதித்து, தனிப்பிரிவில் அனுமதித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT