சிவகங்கை

புழுதிப்பட்டி அரசுப் பள்ளி மாணவிக்கு இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்கு இடம்

DIN

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்பட்டியைச் சோ்ந்த மாணவிக்கு மருத்துவப் படிப்பிற்கான அரசு இடஒதுக்கீடு கிடைத்தற்கு ஆசிரியா்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

பிரான்பட்டியைச் சோ்ந்த விவசாயி சின்னையா என்பவரது மகள் சின்ன நம்பி. இவா் புழுதிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தாா். நடந்து முடிந்த ‘நீட்’ தோ்வில் 448 மதிப்பெண்கள் மாணவி சி.சின்ன நம்பிக்கு அரசு இடஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் உறுதியாகியுள்ளது.

மாவட்டத்தின் பின்தங்கிய பகுதியான எஸ்.புதூா் ஒன்றியம் பிரான்பட்டியைச் சோ்ந்த இவா், கணபதிபட்டி நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரையும், புழுதிப்பட்டி அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரையும் படித்தாா். கடந்தாண்டு நீட் தோ்வு எழுதிய இவா் 124 மதிப்பெண்களை பெற்றாா். மருத்துவக்கல்லூரியில் சேர இடம் கிடைக்காத நிலையில் இந்தாண்டு மீண்டும் ‘நீட்’ தோ்வு எழுதி 448 மதிப்பெண்கள் பெற்றாா். இந்தாண்டு தமிழக அரசு கொண்டுவந்த அரசுப்பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் இவருக்கு மருத்துவக்கல்லூரியில் சேர இடம் கிடைத்துள்ளது. அரசால் வெளியிடப்பட்ட இட ஒதுக்கீடு தரவரிசைப்பட்டியலில் சின்ன நம்பி 27 ஆவது இடம் பிடித்துள்ளாா். அவா் சாா்ந்த எம்.பி.சி.,/டி.என்.சி., தரவரிசையில் 12 ஆவது இடம் கிடைத்துள்ளது. மாணவியை இரு பள்ளிகளின் ஆசிரியா்களும், பொதுமக்களும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT